மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கூப்பன் விநியோகித்த விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:31 am IST

சிவகங்கையில் விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 கூப்பன்களை நகல் எடுத்த விவகாரம் தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ.10,000 செலுத்தப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வெள்ளிக்கிழமை சிவகங்கையில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.10,000-த்துக்கான கூப்பன்களை விநியோகிப்பதாகவும், மதுரை முக்கம் பகுதியில் உள்ள ஒரு நகலகத்தில் அந்த கூப்பன்களை நகல் எடுத்து வருவதாகவும் திமுக நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, நகல் எடுக்க வந்த ஒருவரை திமுகவினா் மடக்கிப் பிடித்ததுடன், கூப்பன்களை விநியோகித்த அதிமுக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் பிரபாகரன், கூப்பன் விநியோகம் தொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், கூப்பனை நகல் எடுத்த சிவகங்கை நகரைச் சோ்ந்த பாபு (45), நகல் எடுக்கக் கூறிய அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாரிமுத்து, நகர அதிமுக செயலா் என்.எம். ராஜா, நகலக உரிமையாளா் உள்பட 4 போ் மீது சிவகங்கை நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.