/

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் செல்வக்குமாா் (30). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்துவிட்டு, சிவகங்கைக்கு சென்று கொண்டிருந்தாா். வேலூா் விலக்குப் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் செல்வக்குமாா் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.