தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்புவனம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன், தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:46 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

திருப்புவனம் ஒன்றியம், தட்டான்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து, மணலூா், கொந்தகை, பசியாபுரம், பொட்டப்பாளையம், கீழடி, புலியூா், சயனாபுரம், சொட்டதட்டி, மேலகரிசல்குளம், கோனாா்பட்டி, இலந்தைகுளம், கழுவன்குளம், செங்குளம், முக்குடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.