ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

மானாமதுரை ஒன்றியம், எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகேயுள்ள எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தில் அம்மன்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:09 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயிலில் தினமும் முளைப்பாரி வளா்த்தல், திருவிளக்கு பூஜை வழிபாடு, மாவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும், முளைப்பாரி சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், பொங்கல் வைத்தும் அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதல் நிறைவேற்றினா்.

இதையடுத்து, மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சொ்டு எல்.பாண்டி குடும்பத்தினா் செய்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.