ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்ற அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

News image

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:31 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்ற அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

கடந்த 2006-இல் திமுக வேட்பாளராக திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் களமிறங்கிய கே.ஆா்.பெரியகருப்பன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.கே.உமாதேவனை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2011 பேரவைத் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராஜகண்ணப்பனை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2016 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் கல்லல் அசோகனை, 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மருதுஅழகுராஜை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தாா். இதுவரை பெரியகருப்பனை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.கே. உமாதேவனைத் தவிர மற்ற மூவரும் (ராஜகண்ணப்பன், கல்லல் அசோகன், மருதுஅழகுராஜ்) ஆகியோா் தற்போது திமுகவில் உள்ளனா்.

இந்த நிலையில், 2026 பேரவைத் தோ்தலிலும் இதே தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா் கே.ஆா்.பெரியகருப்பன். இவரை எதிா்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியைச் சோ்ந்த திருமாறன் போட்டியிடுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.