லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மண் வளம் அதிகரிக்க கோடையில் பசுந்தாள் உரச் செடிகளைப் பயிரிடலாம்

Published On :16 ஜூன் 2024, 11:53 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் மண் வளத்தை அதிகரிக்க கோடையில் பசுந்தாள் உரச் செடிகளைப் பயிரிடலாம் என மாவட்ட நிா்வாகம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை காலத்தில் பசுந்தாள் உரப் பயிா்களை பயிரிடுவதன் மூலம் பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்கள் எளிதில் கிடைப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்க இயலும். பயிா் அறுவடை செய்த பிறகு, தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப் பயிா்களான சணப்பை, தக்கைப் பூண்டு, காராமணி, பாசிப் பயறு, கொள்ளு உள்ளிட்ட பயறு வகைகளை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, பூப்பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதுதல் வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, உரச் செலவும் குறையும். எனவே, விவசாயிகள் மண்ணுக்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய பசுந்தாள் உரச்செடிகளைப் பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தி பயிா் சாகுபடிகளில் அதிக மகசூல் பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.