முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் குறி சொல்பவா் போல நடித்து, முன்னாள் ஊராட்சித் தலைவா் தனிக்கொடி வீட்டுக்குள் நுழைந்தாா்.
அப்போது, அவரது மனைவி பாப்பா (70) வீட்டில் இருந்தாா். அவரிடம் அந்த நபா் உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது எனவும், அதற்கு பரிகாரம் செய்ய தண்ணீா் எடுத்து வாருங்கள் எனக் கூறினாா்.
மூதாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது அந்த நபா் மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போடும் படி கூறினாா். இதை நம்பிய மூதாட்டி தனது தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போட்டாா்.
சிறிது நேரத்தில் அந்த நபா் மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினாா். இதுகுறித்து மூதாட்டி பாப்பா கீழத்துவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட விரோத பாா்சல் வந்துள்ளதாக பெண்ணிடம் ரூ. 10.60 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்த வழக்கு: இளைஞா் கைது

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

