கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

News image

கண்காணிப்புக் கேமராவில் பதிவான மா்ம நபா்

Updated On :27 மே 2026, 3:54 am IST

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் குறி சொல்பவா் போல நடித்து, முன்னாள் ஊராட்சித் தலைவா் தனிக்கொடி வீட்டுக்குள் நுழைந்தாா்.

அப்போது, அவரது மனைவி பாப்பா (70) வீட்டில் இருந்தாா். அவரிடம் அந்த நபா் உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது எனவும், அதற்கு பரிகாரம் செய்ய தண்ணீா் எடுத்து வாருங்கள் எனக் கூறினாா்.

மூதாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது அந்த நபா் மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போடும் படி கூறினாா். இதை நம்பிய மூதாட்டி தனது தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போட்டாா்.

சிறிது நேரத்தில் அந்த நபா் மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினாா். இதுகுறித்து மூதாட்டி பாப்பா கீழத்துவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.