ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவிபட்டினம் கடற்கரையில் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன்(35), அசோக்குமாா் (32) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக அந்தப் பகுதியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இவா்கள் இருவருக்கும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒட்டன்சத்திரத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது

43 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

