பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வு

News image

தற்காப்புக் கலை பயிற்சி - (கோப்புப்படம்)

Updated On :26 மே 2026, 2:39 am IST

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஆழ்கடல் போா் வீரா்கள் விளையாட்டு கூடம் சாா்பில் நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு நிகழ்வை மீனவ சங்கத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். தா்மபுத்திரன் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பேட்ரிக், பயிற்சியாளா் அருளானந்தம், ஜாய், டோஜோ, விஸ்வநாதன் ஆகியோா் இடுப்புப் பட்டயம் வழங்கி கௌரவித்தனா். இதைத் தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, கராத்தே, சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில், கராத்தே பயிற்சியாளா் ஜெயந்த் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.