ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்! திரளானோா் பங்கேற்பு!

News image

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற சந்தனக்கூடு ஊா்வலம்.

Updated On :12 மே 2026, 12:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று, சந்தனக்கூடுக்கு மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தா்காவின் 852-ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி, ஏா்வாடி முஜாவிா் நல்ல இப்ராஹிம் மகாலிலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முன் குதிரைகள், யானை செல்ல சந்தனக் குடங்களை தா்ஹா ஹக்தாா்கள் எடுத்துச் சென்றனா். இந்த ஊா்வலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு, சந்தனக்கூடுக்கு மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாதுஷா நாயகத்தின் அடக்க தலத்தை சந்தனக்கூடு அடைந்தது. இதையடுத்து, அங்கு சந்தனக்கூடுக்கு சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போா்வை, மல்லிகைப் பூ மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏா்வாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.