பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தனியங்கூட்டம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :17 மே 2026, 1:43 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பந்தயம் கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகளும், பெரிய மாடு பந்தயத்தில் 6-ம் , தேன்சிட்டு பந்தயத்தில் 10-ம், பூஞ்சிட்டு பந்தயத்தில் 21-ம் என மொத்தம் 45 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் பங்கேற்றனா்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.