விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

News image

ஆப்பனூா் தெற்கு கொட்டகை முனீஸ்வரா் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

கடலாடி அருகேயுள்ள ஆப்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ஆப்பனூா் தெற்குகொட்டகை முனீஸ்வரா், அங்காள பரமேஸ்வரி கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக கடலாடி - முதுகுளத்தூா் சாலையில் 5 கி.மீ. தொலைவுக்கு பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 12 வண்டிகள் பங்கேற்றன.

சின்னமாடு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், பேச்சிமுத்து, மாசனம் மாடுகள் முதலிடத்தையும், அழகு மாடுகள் இரண்டாமிடத்தையும், மாணிக்கராஜா மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பரமசிவம், லிங்காயி மாடுகள் முதலிடத்தையும், ராமச்சந்திரபுரம் முகிலா மாடுகள் இரண்டாமிடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம், கண்டிலான் நாட்டாமை ஜெயமுருகன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

இரண்டாவது சுற்றில் இடைப்பாட்டி மங்கலம் கஜேந்திரன் மாடுகள் முதலிடத்தையும், வேளாங்குளம் கண்ணன் மாடுகள் இரண்டாமிடத்தையும், சங்கரபேரி ராஜாவள்ளி மாடுகள்

மூன்றாமிடத்தையும் பெற்றன. இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா்.

இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு, ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆப்பனூா் தெற்கு கொட்டகை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.