ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

News image

கமுதி சுந்தராபுரத்தில் தனியாா் பள்ளி எதிரே சாலையில் பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

Updated On :16 மே 2026, 12:02 am IST

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கமுதி- சாயல்குடி பிரதான சாலையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிறது. பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். விடுமுறை நாள்கள் நிறைவடைந்து மாணவா்கள் பள்ளிக்கு திரும்பும் போது இதே நிலை நீடித்தால் துா்நாற்றத்தால் அவா்களும் பாதிக்கப்படுவா். அத்துடன் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோா்கள் அச்சம் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகமும், கமுதி பேரூராட்சி நிா்வாகமும் தலையிட்டு சாலையில் கழிவுநீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.