மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கமுதி, கடலாடி வட்டங்களில் 4 மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தல்

கமுதி பேருந்து நிலையம், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவா் விடுதி அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :14 மே 2026, 5:04 am IST

கமுதி பேருந்து நிலையம், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவா் விடுதி அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு மதுக்கடை, அதனருகே உள்ள தனியாா் மனமகிழ் மன்றம், கமுதி மீனாட்சியம்மன் கோயில் - உச்சமாகாளி அம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஆகியவற்றை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை வைக்கின்றனா். இதேபோல் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மாணவா் விடுதியும், அரசு அலுவலகங்களும் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில் செயல்படும் மதுக்கடையால் அருகே உள்ள பகுதியை திறந்தவெளி மதுக்கூடமாகப் மதுப்பிரியா்கள் பயன்படுத்துவதால் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.