திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயி. இவரது பசுமாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற போது, திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சுமாா் 10 அடி ஆழமுள்ள இந்த தொட்டிக்குள் விழுந்த மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

