கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி நரிப்பையூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாயல்குடியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி ரவி (42) மீது கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
ஆனால், காவல் துறையினா் புகாரைப் பெற கால தாமதம் செய்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதைத் தொடா்ந்து, இரு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பாலியல் புகாா் அளிக்கப்படும் போது காவல் துறையினா் உடனே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மகளிா் அமைப்பினா் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

