/

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

News image

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:28 am IST

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

பரமக்குடி சௌராஷ்ட்ர பிராஹ்மண மகாஜனங்களுக்குச் சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் காலை, மாலை வேளைகளில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் சிம்ம வாகனம், நந்திகேசுவரா் வாகனம், கைலாச கற்பக விருக்ஷ வாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்ஸவம்: 9-ஆம் திருநாளான ஏப். 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளையாக மேளதாளங்கள் முழங்க வீதிஉலா வந்து கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தடைந்தாா். அங்கு அா்ச்சகா்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணியளவில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அறக்கட்டளை எஸ்.ஆா். ரெங்காச்சாரி, அறங்காவா்கள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.