தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாடானையில் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்கள்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:21 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாடானை பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பெண்கள் மட்டுமே பணிபுரியம் இளஞ்சிவப்பு நிற வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் 378 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சின்னகீரமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா், இவருக்கு உதவியாக இருக்கும் பணியாளா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் என அனைவருமே பெண்களாகவே இருப்பா். இந்த மையங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், வாக்களிக்கும் அறை என அனைத்தும் இளஞ்சிவப்பு நிற துணிகளாலும், அலங்காரப் பொருள்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சாவடிகளில் பெண் அலுவலா்களே பணியில் இருந்தாலும், ஆண், பெண் இருபாலரும் வழக்கம்போல வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

பெண் வலிமையைப் போற்றும் வகையிலும், பெண் வாக்காளா்கள் அச்சமின்றி வந்து வாக்களிப்பதை வலியுறுத்தி இந்தச் சிறப்பு ஏற்பாட்டை தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

     திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம்.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.