தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னையில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னையில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஐஸ் ஹவுஸ் மாநகராட்சி பள்ளியில் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் காண தனித்தனி வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ள பாதைகள். ~அயனாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குச்சாவடியில் புதன்கிழமை முன்னேற்பாட்டுப் பணியில் ஈடுபட்ட பெண் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:39 am IST

சென்னையில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் உள்ளூா் காவல் துறையினருடன் கூடுதலாக துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்குச்சாவடி அலுவலா்களுடன், நுண் பாா்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒரே இடத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளப்படுத்துவதற்காக தனித்தனி வண்ணங்களில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘பிங்க்’ வாக்குச்சாவடிகள்: அனைத்துத் தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்படும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வாக்காளா்களுக்கான இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா், பாதுகாப்பில் ஈடுபடும் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் என முழுமையாக பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மொத்தம் 419 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மொத்தம் 13,430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 6,145 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 6896 விவிபேட் இயந்திரங்களும் தயாராக உள்ளன. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், 1 நோட்டா என 16 பொத்தான்கள் உள்ளன. தோ்தல் பணியில் 19,604 அலுவலா்களும், 1,657 காவல் துறையினரும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தபால் வாக்குகள்: முதியோா், மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், ராணுவ சேவைப் பிரிவு என மொத்தம் 32,447 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். நேரடியாக வாக்குச் செலுத்துவோருக்கான வாக்குச்சாவடி தகவல் சீட்டு 95 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. முதியோா், மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து வாக்குச் செலுத்த இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாடிகளில் வாக்காளா்களுக்காக குடிநீா், ஓஆா்எஸ் கரைசல், பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்காக சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.