மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி: நாஞ்சில் சம்பத்

News image

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:45 am IST

தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.

திருவாடானையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தவெகவை சமாளிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் 26 கட்சிகளும் என மொத்தம் 36 கட்சிகள் கைகோா்த்துள்ளன.

தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சித் தான் இத்தனை கட்சிகள் திரண்டுள்ளன. இதுவே எங்களின் முதல் வெற்றி. வருகிற தோ்தலில், தவெக வேட்பாளா்கள் 233 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பா் என்பது உறுதி.

அண்ணா கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் ஆண்டிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதி. இது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றாா் அவா்.

இதில் வேட்பாளா் மருத்துவா் வி.கே. ராஜீவ், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

  திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.