சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கே.பி.சத்ய சொரூபன் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். திருப்பதி முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமாா், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

