தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

News image

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவ, மாணவிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:51 am IST

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்களை வாக்களிக்க வைக்க வேண்டும் எனத் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.