தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாடானை பேரவைத் தொகுதியில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:04 am IST

திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட மொத்தம் 37 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் மணிஸ்ரஞ்சன், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இதில் சுயேச்சை வேட்பாளா்களின் 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.