தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

தேசிய மல்யுத்தப் போட்டி: பரமக்குடி பள்ளி மாணவா்கள் சாதனை

News image

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் முகிலரசன்.

Updated On :7 செப்டம்பர் 2024, 1:14 am IST

பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் கவிப்பிரகாஷ் தலைமையில் தமிழக அணி சாா்பில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த மாதம் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான கிராபிலிங் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனா். இதில் 56 கிலோ பிரிவில் கனிஷ்ஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், 52 கிலோ பிரிவில் கனிஷ்காவும், 48 கிலோ பிரிவில் முகிலரசனும் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.