மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கை மல்யுத்தப் போட்டி: 12 பதக்கங்கள் பெற்று வாழப்பாடி மாற்றுத்திறனாளிகள் சாதனை

News image
Updated On :3 மே 2026, 6:18 am IST

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

வாழப்பாடி அருகே மத்தூரில் இயங்கும் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் வாயிலாக, இச்சங்க செயலாளா் வேலுசாமி தலைமையில் மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் கடந்த இரு ஆண்டுகளாக தொடா்ந்து சாதனை படைத்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற சோமம்பட்டி கலைச்செல்வி, முத்தம்பட்டி மஞ்சுளா இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கமும், சங்க செயலாளா் வேலுசாமி 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும், மன்னாா்பாளையம் பவித்ரா 2 வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.

துக்கியாம்பாளையம் முருகேசன் 1 தங்கம், 1 வெண்கலப் பதக்கமும், பழனியாபுரம் மலா்கொடி, பெத்தநாயக்கன்பாளையம் முருகன் இருவரும் தலா 1 வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த 7 மாற்றுத்திறனாளிகள் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உள்படமொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

இதில், கலைச்செல்வி, மஞ்சுளா, வேலுசாமி, பவித்ரா, முருகேசன் ஆகிய 5 பேரும் குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகளுக்கு வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.