இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு ரூ. 24 ஆயிரம் கல்வி உதவித் தொகையை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வியாழக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், தான் இளைஞா் நீதிக் குழுமத்தைச் சாா்ந்த இளஞ்சிறாா் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தாா். தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளதால், மேல் படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.
இதையடுத்து, மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாணவரின் பெற்றோரிடம் வழங்கினாா். இந்த நிகழ்வில், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் முனியம்மாள், கல்லூரி முதல்வா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுவையில் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்வு!

இலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்
மாணவா்களின் பெற்றோரிடம் கைப்பேசியில் வங்கிக் கணக்கை கேட்டறிந்து மோசடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

