ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் அளிக்கப்பட்டன.

News image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவனையில் உடல் உறுப்புகள் தானம் அளித்த தேவநாதனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, அவரின் குடும்பத்தாரிடம் பாராட்டுச் சான்றை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :14 மே 2026, 5:22 am IST

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் அளிக்கப்பட்டன.

மதுரை மாவட்டம், தெத்தூா் அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சி. தேவநாதன். இவா், அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தாா். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து, தேவநாதனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதன்படி, தேவநாதனின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியன புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மருத்துவமனைக்குச் சென்று மறைந்த சி. தேவநாதனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, உறுப்பு தானம் அளிக்க முன்வந்த தேவநாதனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஆட்சியா், அவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், மதுரை கிழக்கு வட்டாட்சியா் பாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.