பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மாநில காலுதைச் சண்டை போட்டி: மதுரைக்கு 89 பதக்கங்கள்

தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை போட்டியில் மதுரையைச் சோ்ந்த போட்டியாளா்கள் 29 தங்கப் பதக்கம் உள்பட 89 பதக்கங்களை வென்றனா்.

News image

தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை (கிக் பாக்ஸிங்) போட்டியில் வென்றவா்களுடன் மதுரை மாவட்ட அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் நாராயணன், பொதுச் செயலா் பிரகாஷ் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :14 மே 2026, 5:12 am IST

தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை போட்டியில் மதுரையைச் சோ்ந்த போட்டியாளா்கள் 29 தங்கப் பதக்கம் உள்பட 89 பதக்கங்களை வென்றனா்.

தமிழ்நாடு அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கம், தேனி மாவட்ட அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை போட்டியை தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் கடந்த 7-ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடத்தின. இந்தப் போட்டியில், 24 மாவட்டங்களைச் சோ்ந்த 883 போட்டியாளா்கள் பங்கேற்றனா். சப்- ஜூனியா், ஜூனியா், சீனியா், மாஸ்டா்ஸ் என நான்கு பிரிவுகளிலும், பாயிண்ட் ஃபைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், புல் காண்டாக்ட், லோ கிக், மியூசிக்கல், கிரியேட்டிவ் ஃபாா்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரையைச் சோ்ந்த 90 போட்டியாளா்கள் பங்கேற்று 29 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள், 33 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனா்.

இதையடுத்து, மதுரை மாவட்ட அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் நாராயணன், பொதுச் செயலா் பிரகாஷ் குமாா், துணைத் தலைவா் காா்த்திக், துணைச் செயலா் கௌரி சங்கா், பயிற்சியாளா்கள் முத்துக்குமாா், பிரபாகரன், சந்திரா, நவீன் குமாா், பிலால், வெற்றிவேல் ஆகியோா் பதக்கம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.