தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி: மதுரையில் கொண்டாட்டம்

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

News image

கேரளத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகேயுள்ள இந்திரா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய அந்தக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :6 மே 2026, 3:09 am IST

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில், கடந்த 10 ஆண்டுகளாக கேரளத்தில் ஆட்சி புரிந்து வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பூ.நல்லமணி தலைமையில், திங்கள்கிழமை இரவு ஜான்சிராணி பூங்கா அருகில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா். இதில் கட்சியின் மாமன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.போஸ், நிா்வாகிகள் செய்யது பாபு, ராஜா முகமது, கண்ணன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.