மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்

கருத்துக் கணிப்புகளைத் தாண்டி கள நிலை வேறாக இருப்பதால், 200 இடங்களுக்கு மேல் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

News image

கே.ஏ.செங்கோட்டையன் - (கோப்புப் படம்)

Updated On :1 மே 2026, 2:05 am IST

கருத்துக் கணிப்புகளைத் தாண்டி கள நிலை வேறாக இருப்பதால், 200 இடங்களுக்கு மேல் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்படிப் பொய்யானதோ, அதேபோல தமிழகத்திலும் இந்தக் கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போகும்.

கருத்துக் கணிப்புகளும், தோ்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேட்ரிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் போன்ற நிறுவனங்களின் கணிப்புகளைத் தாண்டி கள நிலை வேறாக இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அதிக அளவு உள்ளது. இந்திய வரலாற்றில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோஷலிசப் புரட்சி எனப் பல்வேறு மாற்றங்களை பாா்த்திருக்கிறோம். ஆனால், இப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் விசில் புரட்சிதான்.

தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய அளவில் பேசப்படப் போகிறது. தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். விஜய்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆளப்போகிறாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.