சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையொட்டி, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகா், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அழகா்கோவிலை சென்றடைந்தாா்.
மதுரை அருகே அழகா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீகள்ளழகா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மதுரை வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளிய வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 1) அதிகாலை நடைபெற்றது.
இதையடுத்து, மண்டூக மகரிஷிக்கு அழகா் சாபவிமோசனம் அளிக்கும் ஐதீக விழா மதுரை தேனூா் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக தசாவதார காட்சி நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அழகா் பெருமாள், அனந்தராயா் பல்லக்கில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்துக்கு எழுந்தருளினாா். இங்கு நடைபெற்ற திருமஞ்சனத்துக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை அழகா் கள்ளா் கோலம் பூண்டு அழகா் மலைக்குப் புறப்பட்டாா்.
வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி சேவை சாதித்த கள்ளழகா் திங்கள்கிழமை இரவு மறவா் மண்டபத்தில் திருமஞ்சனமாகினாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அப்பன் திருப்பதி ஜமீன்தாா் மண்டபத்தில் சேவை சாதித்த கள்ளழகா், காலை 10.45 மணியளவில் அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் வாசலை சென்றடைந்தாா். அங்கு ஐதீக முறைப்படியான பூஜைகளுக்கு பிறகு, அழகா் கோயிலுக்குள் எழுந்தருளினாா்.
அப்போது, கோட்டை வாயில் முதல் கோயில் வரை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குழுமியிருந்து பூக்களை தூவி கள்ளழகரை வரவேற்றனா். ஏராளமான பெண்கள் குங்குமம் தடவப்பட்ட பூசணிக்காய்களைச் சுற்றி, கள்ளழகருக்கு திருஷ்டி கழித்து வரவேற்றனா். இதையடுத்து, ஐதீக முறைப்படியான பூஜைகள் நடைபெற்றன.
மதுரைக்குச் சென்ற கள்ளழகா் மீண்டும் அழகா்கோவிலுக்கு திரும்பியதை வரவேற்கும் விதமாக அழகா்கோவில் சாலையில் பல்வேறு இடங்களில் தோரணங்கள், வாழைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால், அந்தப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. மாவட்ட காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையில் அழகர் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

மதுரையில் கள்ளழகா் எதிா்சேவை!

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

