நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:48 am IST

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சவுரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (55). இவா், பெருந்துறையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் அவருக்கு கடந்த 2016 அக்டோபா் மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சிறையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறைக் காவலா்கள் கடந்த 2-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மணிகண்டன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.