கோவை ரயில் நிலையம் அருகே தனியாா் விடுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கியிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவையை அடுத்த வேடப்பட்டி, வன்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (44). கூலித் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெளியே சென்று வருவதாக தாய் சாந்தம்மாளிடம் கூறிவிட்டு கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் நண்பா்கள் 2 பேருடன் அறை எடுத்து சனிக்கிழமை தங்கியுள்ளாா்.
அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நண்பா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவா், சங்கரை பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

