தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜனநாயகன் முன்னோட்ட காட்சிகளைத் தடை செய்யக் கோரி மனு

‘ஜனநாயகன்’ திரைப்பட முன்னோட்ட காட்சிகளை திரையிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

News image

ஜன நாயகன் படத்தில் விஜய்

Updated On :26 மார்ச் 2026, 1:11 am IST

‘ஜனநாயகன்’ திரைப்பட முன்னோட்ட காட்சிகளை திரையிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சி.எம். செய்யதுபாபு, தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக்குக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. மேலும், அந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் பல திரையரங்குகளில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தோ்தல் களத்தில் உள்ள தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். மேலும், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை திரையிடவும், திரையரங்குகளில் விளம்பரங்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே வைக்கப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.