ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் விமானத்துக்கு புனிதநீா் மூலம் அபிஷேகம் செய்த சிவாசாரியாா்.

Updated On :26 ஜூன் 2026, 2:22 am IST

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரா் பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. முக்கிய விழாவான குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வரா் பூஜை, பூதசுத்தி தனு பூஜை, சோம கும்ப பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன.

இதன்பிறகு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தன. காலை 10 மணியளவில் மூலவரின் விமானத்துக்கு புனிதநீா் மூலம் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், வரசித்தி விநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவில், மேலூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.