வருகிற வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அறைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. விடுமுறைக்குப் பின், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 4- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை தொடங்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உத்தரவிட்டாா். இதையடுத்து,
அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், ஆய்வகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளியைச் சோ்ந்த பணியாளா்கள், அலுவலா்கள் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தயாா்

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

