தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: சுந்தா் சி.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. கேட்டுக் கொண்டாா்.

News image

மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி வேட்பாளா் சுந்தா் சி. உடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு சுந்தா் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:30 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. கேட்டுக் கொண்டாா்.

எல்லீஸ் நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை மத்திய தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இங்குள்ள மக்களை சந்திக்கும் போது வெற்றி உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியாது என சிலா் கூறுகின்றனா். அதை முறியடித்து வெற்றி பெறுவோம். திமுக தலைமையில் வலிமையான கூட்டணி என்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தற்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காததால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி முழுவதும் வீணாகிறது. தோல்வி பயத்தில் என் மீது வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, தவறான கருத்துகளை பரப்புகின்றனா். அவற்றையெல்லாம் மக்கள் நம்பமாட்டாா்கள். மதுரை மாநகராட்சி தற்போது குப்பை நகரமாக மாறி வருகிறது. இங்கு வரி விதிப்பு முறைகேடுகளில் சிக்கி மேயா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி ஊழல் செய்தது திமுக அரசுதான். ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தமிழகம் அனைத்து நிலைகளிலும் முன்னேற அதிமுக அரசு அமைய வேண்டும். எனவே, வருகிற தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு அதிமுக மதுரை மாநகர மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ தலைமை வகித்தாா். புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தாா். தமிழக பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு சுந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.