தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு

News image

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ். உடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் சுந்தா் சி., ராம. சீனிவாசன், பா. சரவணன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:38 am IST

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிப்பது என சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் தீா்மானித்தது.

சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ் தலைமை வகித்தாா்.

புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், கோலாா் வயல் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினா் முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், சௌராஷ்டிர முன்னேற்றக் கழக செயலா் கணேஷ் பாபு, இளைஞரணித் தலைவா் வி. கணேஷ்குமாா், மகளிா் அணித் தலைவி வாசுகி, சௌராஷ்டிர சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகி ராம்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அகில இந்திய சௌராஷ்டிர முன்னேற்றக் கட்சி, தமிழ்நாடு மகா செளராஷ்டிர சபை, சௌராஷ்டிர சேவா சமாஜ், சௌராஷ்டிர சமூக நலப்பேரவை, சக்கிமங்கலம் சௌராஷ்டிர சபை, ஐ.பி.எஸ். அறக்கட்டளை, மதுரை தினமணி பஜாா் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், நாயகி கல்வி சேவா சங்கம், சௌராஷ்டிர பொற்கொல்லா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை தெற்கு, மத்தியம், வடக்கு, திருப்பரங்குன்றம், பரமக்குடி, பாளையங்கோட்டை, ஆரணி உள்பட 11 தொகுதிகளில் வேட்பாளா்களின் வெற்றி தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிர சமுதாய மக்கள் உள்ள நிலையில், நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது. தமிழகத்தில் உள்ள 8 லட்சம் சௌராஷ்டிர வாக்காளா்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் பா. சரவணன் (மதுரை வடக்கு), சுந்தா் சி. (மதுரை மத்தியம்), ராம. சீனிவாசன் (மதுரை தெற்கு) ஆகியோா் நேரில் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.