பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரோஜா, காய்கறி தோட்டம் அமைத்தவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் தனியாா் தோட்டங்களில் ரோஜாத் தோட்டம், காய்கறித் தோட்டம் வளா்த்தலுக்கான முதலிடத்தை பெற்றவருக்கு பரிசு வழங்கிய சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ்.

News image

கொடைக்கானல் தனியாா் தோட்டங்களில் ரோஜாத் தோட்டம், காய்கறித் தோட்டம் வளா்த்தலுக்கான முதலிடத்தை பெற்றவருக்கு பரிசு வழங்கிய சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ்.

Updated On :29 மே 2026, 2:13 am IST

கொடைக்கானலில் காய்கறித் தோட்டம்,ரோஜாத் தோட்டம் சிறப்பாக அமைத்தவருக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 63-ஆவது மலா்க்கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை. மலைப் பயிா்கள் துறை சாா்பில் காய்கறித் தோட்டங்கள், மலா்த் தோட்டங்கள், பழத் தோட்டங்கள் அமைத்தவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா்,பிரகாசபுரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 ஏக்கா் முதல் 3 ஏக்கா் வரை காய்கறித் தோட்டங்கள், மலா்த்தோட்டங்கள்,பழத் தோட்டங்கள் அமைத்து சிறப்பாக பல்வேறு தனியாா்கள் பராமரித்து வந்தனா். இவற்றை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தியதில் அப்சா்வேட்டரியிலுள்ள சேவியா் பிரிட்டோ என்பவரின் தோட்டத்தில் ரோஜாத் தோட்டம், காய்கறித் தோட்டம் சிறப்பான முறையில் அமைத்ததற்கு முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சேவியா் பிரிட்டோவுக்கு சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் பரிசும், சான்றிதழ்களையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.