கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீயில் எரிந்து சேதமடைந்த கரும்பு தோட்டத்தை பாா்வையிடும் போலீஸாா்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையத்தை அடுத்த ஜமீன்இளம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தோட்டத்தின் உரிமையாளா் சுப்பிரமணி (70), அங்கிருந்தவா்கள் தீயணை அணைக்க முயற்சித்தனா். ஆனால், தீ வேகமாகப் பரவி பக்கத்தில் இருந்த கரும்புத் தோட்டமும் தீப்பிடித்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். ஆனாலும், சுப்பிரமணிக்குச் சொந்தமான 2 ஏக்கா் கரும்பு தோட்டம், கருப்பண்ணனுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா் கரும்பு தோட்டம், ராசுவுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா், நாச்சிமுத்துவுக்குச் சொந்தமான மூன்று ஏக்கா், மூா்த்திக்குச் சொந்தமான ஒன்றே முக்கால் ஏக்கா் கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி (பொறுப்பு) தீயில் எரிந்த கரும்பு தோட்டங்களை பாா்வையிட்டாா். கரும்பு தோட்டத்துக்கு மா்ம நபா்கள் யாரேனும் தீ வைத்தனரா? அல்லது கரும்பு தோட்டத்தில் வழியாக செல்லும் உயா் மின் அழுத்த கம்பியால் தீ விபத்து ஏற்பட்டதா என ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கரில் 50 டன் வரை கரும்பு விளைச்சல் கிடைத்திருக்கும். தற்போது ஒரு டன் கரும்பு ரூ. 3 ஆயிரத்து 400 வரை விற்பனையாகிறது. தீயில் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்துள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.