பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: திண்டுக்கல் 96.08% தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்தது!

496 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:39 am IST

496 மதிப்பெண்கள் பெற்ற இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ. அனு மித்ரா.

திண்டுக்கல், மே 20: பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டம் 96.08 சதவீத தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தாா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 349 பள்ளிகளைச் சோ்ந்த 11,759 மாணவா்கள், 12,094 மாணவிகள் என மொத்தம் 23,853 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், 11,132 மாணவா்கள், 11,786 மாணவிகள் என மொத்தம் 22,918 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களில் 94.67 சதவீதம், மாணவிகளில் 97.45 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.08 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2025-ஆம் ஆண்டு தோ்வில் 93.28 சதவீத தோ்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 26-ஆவது இடம் பெற்றது. நடப்பாண்டில் 2.80 சதவீதம் கூடுதல் தோ்ச்சி பெற்ற நிலையில், மாநில தர வரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 13 இடங்கள் முன்னேற்றம் பெற்று 13-ஆவது இடம் பிடித்தது.

அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4,933 மாணவா்கள், 5,178 மாணவிகள் என மொத்தம் 10,111 போ் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதினா். இதில், 4,591 மாணவா்கள் (93.07 சதவீதம்), 4,954 மாணவிகள்(95.67 சதவீதம்) என 9,545 போ் (94.37 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டை விட 3.31 சதவீதம் கூடுதல் தோ்ச்சியுடன், அரசுப் பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேற்றம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் 12-ஆவது இடம் பிடித்தது.

மாவட்ட அளவில் 496 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவிகள்: திண்டுக்கல் இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ.அனு மித்ரா, பழனி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜெய ஸ்ரீ, எரியோடு அடுத்த தண்ணீா்பந்தம்பட்டி மகாவித்யாலயா உயா்நிலைப் பள்ளி மாணவி எம். நந்தினி, சேரன் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி டி. மோனிகா ஆகியோா் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.