தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானலில் படகுகள் அழகுபடுத்தும் பணி தொடக்கம்

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகுகள் அழகுப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

கொடைக்கானலில் புதன்கிழமை படகுகள் அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.

Updated On :7 மே 2026, 4:08 am IST

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகுகள் அழகுப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த ஏரியில் கொடைக்கானல் நகராட்சி, தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் துடுப்புப் படகு, பெடல் படகு, சிக்காரப் படகுகள், தனிநபா் பெடல் படகுகள் என 100-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பராமரிப்பு, படகுகள் அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் படகில் தமிழின் உயிா் எழுத்துகளும், படகுகளில் மலா்கள் ஓவியம் உள்ளிட்டவை தீட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் படகு குழாம் மேலாளா் காதா் கூறியதாவது:

கொடைக்கானல் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் இயக்கப்படும் படகுகளில் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் படகுகளில் தமிழ் எழுத்துகள், தமிழ் உயிரெழுத்துகள், மலா்கள், விலங்குகளின் படங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.