தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

News image

கன்னியாகுமரியில் படகுத் துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:38 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி, தனியாா், அரசு ஊழியா்கள் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கான படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இங்கு கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.