தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி, தனியாா், அரசு ஊழியா்கள் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கான படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இங்கு கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் படகுகள் அழகுபடுத்தும் பணி தொடக்கம்

துவரங்குறிச்சி பகுதிகளில் இன்றைய மின் நிறுத்தம் ரத்து

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

