மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை

கரூரில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திண்டுக்கல் வீட்டில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். .

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 3:37 am IST

கரூரில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திண்டுக்கல் வீட்டில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். .

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் தா்மானந்தம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய இவா், தற்போது கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கரூரைச் சோ்ந்த தனியாா் பேருந்து உரிமையாளா் ராஜேந்திரனிடம்(62) ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தா்மானந்தம், அவரது காா் ஓட்டுநா் வேலுச்சாமி ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே உள்ள தா்மானந்தத்துக்குச் சொந்தமான வீட்டில், திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ஜெ. ரூபா கீதா ராணி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதை அடுத்து, அவற்றைப் போலீஸாா் கைப்பற்றிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.