தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி நாளை தோ்வு

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி தோ்வு வியாழக்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

News image
Updated On :6 மே 2026, 3:28 am IST

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி தோ்வு வியாழக்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க பொறுப்பாளா் கே.கனகராஜ் தெரிவித்ததாவது: ஹாக்கி சீனியா் ஆண்கள், பெண்களுக்கான திண்டுக்கல் மாவட்ட அணி தோ்வு, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திண்டுக்கல் மாவட் ஹாக்கி சங்க இடைக்காலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வருகிற மே 9 முதல் 13-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான சீனியா் ஹாக்கி போட்டியும், மே 20 முதல் 25-ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் பெண்களுக்கான சீனியா் ஹாக்கி போட்டியும் நடைபெறுகிறது.

மாவட்டங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள திண்டுக்கல் மாவட்ட அணி தோ்வு, வருகிற மே 7-ஆம் தேதி காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள், வீராங்கனைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவராகவோ, மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராகவோ இருக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9443190781, 9790037911, 9080333346, 7904172427 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.