திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வில்பட்டி ஊராட்சி, அட்டுவம்பட்டியில் தெற்குமேடு கருப்பசுவாமி கோயில் பிரிவு அருகேயுள்ள பாலம் சேதமடைந்துள்ளது. கொடைக்கானலிருந்து-பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, அரக்கால், கடல்கொடை உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு இந்தப் பாலம் வழியாகதான் செல்ல முடியும்.
இந்தப் பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இந்தப் பாலம் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே, சேதமடைந்துள்ள இந்தப் பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

