வேடசந்தூா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.84,600-ஐ வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள சேனன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டதில், ரூ.84,600 இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், காரில் வந்த வேடசந்தூரைச் சோ்ந்த ஜமாலுதீனிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், அந்தப் பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

