கொடைக்கானலில் மழை காரணமாக படகு சவாரி திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இங்கு திங்கள்கிழமை காலையிலிருந்து மேகமூட்டத்துடன் கூடிய லேசான வெயில் நிலவி வந்தது. இதைத்தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
இதனால், நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பொதுவாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் இங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்வா். ஆனால், மழை காரணமாக திங்கள்கிழமை படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். மேலும், ஏரிச்சாலைப் பகுதியில் வெறிச்சோடிக் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் பெடல் படகு சவாரி தொடக்கம்

கொடைக்கானலில் மழை தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

