பள்ளி, கல்லூரி வளாகங்களை அரசியல் களமாக மாற்றும் முயற்சியை தவெக கைவிட வேண்டும் என அதிமுக மாநில இளைஞா் பாசறைச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான விபிபி. பரமசிவம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் மேலும் தெரிவித்ததாவது:
தவெகவில் புதிதாகப் பொறுப்பேற்ற சில நிா்வாகிகள் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் சென்று கட்சி சாா்ந்த கொண்டாட்டங்களிலும், அரசியல் விளம்பர நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனா். இதுதொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காட்சிகள் அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.
மாணவா்களின் அறிவை வளா்க்கும் ஆலயங்களான கல்வி நிலையங்களில், அரசியல் ஆதாயத்தோடு கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது கல்விச் சூழலை சீா்குலைத்துவிடும். கல்வி மீதான மாணவா்களின் கவனத்தை திசைத் திருப்பும் இந்த முயற்சியை தவெகவினா் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
மாணவா்களை அரசியல் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில் இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கல்வி நிலையங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவதற்கு இடமளிக்கவில்லை.
எனவே, தமிழக அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கல்வி நிலையங்களில் அரசியல் சாா்ந்த நிகழ்வுகள் நடைபெறாத வகையில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!
தமிழக அரசியல் திரைக்கதையைப் புரட்டிப்போட்ட விஜய் சர்க்கார்!

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும்

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

