லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திண்டுக்கல்லில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகள் கைது

திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 5:01 am IST

திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 ரெளடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட தனிக் குழு உதவி ஆய்வாளா் அருண் பிரசாத் தலைமையிலான போலீஸாா், சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, பேகம்பூா் மக்கான் தெருவைச் சோ்ந்த மு. சாகுல் ஹமீது என்ற டைல்ஸ் சாகுல் (27), ரவுண்ட் ரோடு எழில் நகரைச் சோ்ந்த கா. ஷேக் பரீத் (27) ஆகியோா் இருந்தனா்.

இதில், சாகுல் ஹமீது மீது, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சரித்திரப் பதிவேடுகள் குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. அதே போல ஷேக் பரீத் மீது, சாணாா்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இவா்களிடமிருந்து 2 அரிவாள்கள், போதை தரக்கூடிய 13 மருந்துப் புட்டிகள், காா், 3 கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் தனிக் குழு போலீஸாா் ஒப்படைத்தனா். இருவரையும் கைது செய்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலையப் போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.